Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழ்நாடு காவல்துறை திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற திருச்சி காவலர்கள்

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69-வது ஆண்டு திறனாய்வு போட்டியில் சிறந்த சாதனை படைத்த திருச்சி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில், திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பங்கேற்ற காவலர்கள் மூன்று பிரிவுகளில் மாநில அளவில் சிறந்து விளங்கினர்.

தடய அறிவியல் புலனாய்வு பிரிவில், கல்லக்குடி காவல் நிலைய காவலர் விஜயகுமார் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலர் ராம்கி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

சிறுகனூர் காவல் நிலைய தலைமை காவலர் முருகானந்தம் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இந்த மூவரையும் பாராட்டி, இன்று (ஆகஸ்ட் 18) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *