திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஊருடையாபட்டியைச் சேர்ந்த டிரைவர் குணசேகரன் (25), (இறந்தவர்) இவருக்கும் சின்ன காருகுடியைச் சேர்ந்த ஹரிஷ் (27) ,
மதிவாணன் (24) ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது,
நேற்று இரவு மேட்டுப்பாளையம் பகுதியில் ஹரிஷ் மற்றும் குணசேகரன் இருவருக்கும் இடையே வாய் தகராறு நடைபெற்றுள்ளது,
இந்நிலையில் குணசேகரன்
நேற்று நள்ளிரவு காருகுடி கிராமத்திற்கு நண்பர்களுடன் ஹரிஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்,
அப்போது ஹரிஷ் வீட்டில் வைத்திருந்த அரிவால்மனையை எடுத்து குணசேகரன் முகத்தில் ஹரிஷ் வெட்டியதில்
நிகழ்விடத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார்,
குணசேகரன் சடலத்தை கைப்பற்றிய தா.பேட்டை போலீசார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்,
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஹரிஷ் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தொடர்ந்து குணசேகரன் உறவினர்கள் தா.பேட்டை முதல் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குணசேகரின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்,
முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்,
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments