திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட் ) திருச்சி மண்டலம் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் இன்று 30.01.2026 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட நீதிபதி கார்த்திகா அவர்கள், சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி பிரபு அவர்கள், நீதிபதி சாமிநாதன் அவர்கள், நீதிபதி நசீர் அலி அவர்கள், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ். பி. கணேசன் அவர்கள், துணைத்தலைவர் வடிவேல் சாமி அவர்கள்,
செயலாளர் முத்துமாரி அவர்கள், இணை செயலாளர் விக்னேஷ் அவர்கள், பொருளாளர் சதீஷ் அவர்கள், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் அவர்கள், செயலாளர் வெங்கட் அவர்கள், துணைத்தலைவர் சசிகுமார் அவர்கள்,
திருச்சி மண்டல துணை மேலாளர்கள் புகழேந்தி ராஜ் (தொழில்நுட்பம்), ராஜேந்திரன் (கட்டிடம்) மற்றும் வழக்கறிஞர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், திருச்சிராப்பள்ளி நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி மாணவ மாணவிகள்,
என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments