தேசிய ஜனநாயக கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்றதொகுதியில் போட்டியிடும் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து இன்று மாலை தனது பிரசாரத்தை துவக்கினார்.

வீடு வீடாக சென்று தேர்தல் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தார்கள்.
பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அவர்… ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரத்தில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு குழு அமைத்து இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார், மாநகராட்சியா அல்லது மா நரக ஆட்சியா என்று தெரியாத

அளவுக்கு மாநகராட்சியில் பல்வேறு வேதனைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வருகிறது, அதிகாரிகளை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments