திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி குப்பைகள் ஏற்றிச்செல்லும் சிறியரக வாகனத்தில் முன்புறம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், குப்பை சேகரித்து சென்ற தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினார்கள்.அதனைத் தொடர்ந்து தீயை அணைக்க முற்பட்டும் முடியாதநிலையில் தீயானது கொழுந்துவிட்டு எரிந்து சிறிய லோடு வாகனம் முழுவதுமாக

பற்றிஎரிந்தது,இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி குப்பை சேகரிக்கும் சிறிய லோடு வாகனம் தீப்பற்றியதால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருவானைக்காவல் மேம்பாலத்தில் குப்பை வாகனத்தில் தீ விபத்து- ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்



Comments