திருச்சி மாவட்டம் முசிறியில் திறந்திருந்த
வீட்டில் பீரோவில் இருந்த 18 சவரன் நகை திருட்டு.மாடிக்கு சென்று கீழே வருவதற்குள் திருட்டு சம்பவம் நடந்ததாக அதிர்ச்சி – முசிறி போலீசார் விசாரணை..திருச்சி மாவட்டம், முசிறி ஓம் சக்தி கோவில் அருகில் உள்ள தட்டார தெருவில் சர்தார்(65) வெளிநாட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஷகிலா (50) மற்றும் மகள் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

மகன் துபாயில், மருமகன் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.மனைவி சகிலா வெளியே சென்ற நிலையில்வீட்டில் சர்தார் மட்டும் இருந்து மேல் மாடிக்கு சென்ற கீழே வந்து பார்த்துள்ளார் அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது.கதவுகளும் திறக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் இருந்த இருந்த 18 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது. இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்தில் முசிறி டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் போலீசார் வீட்டில் இருந்த சர்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர், தொடர்ந்து திருடிய மர்ம நபர்கள் குறித்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு மர்ம நபர்களை முசிறி போலீசார் தேடி வருகின்றனர்.வீட்டில் இருந்த 18 சவரன் நகைகள் காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments