காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை துணை முதல்அமைச்சர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு
(21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன்
மண்டல குழு தலைவர் மு. மதிவாணன்பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கவிஞர் சல்மாஆகியோர் உடன் இருந்தனர்.மற்றும் கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் வல்லுனர்கள் உடன். இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






