பாகநிலை முகவர்கள் கூட்டம்- தலைமை வகித்த கல்வித்துறை அமைச்சர்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு திருவெறும்பூர் மணப்பாறை ஆகிய தொகுதிகளின்பாகநிலை முகவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . இந்த நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்தொகுதி பார்வையாளர்கள்
கதிரவன், மணிராஜ், மருத்துவர் அண்ணாமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
What's Your Reaction?






