கடந்த 5 மாதமாக சட்டவிரோத மது விற்பனை! தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 5 பேர்!!

கடந்த 5 மாதமாக சட்டவிரோத மது விற்பனை! தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 5 பேர்!!

திருச்சி துவாக்குடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலின் பின்புறம் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை கடந்த 5 மாதமாக சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த தனபால், பிரகாஷ்,சுகுமாரன், கந்தசாமி, சாமிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 22 மது பாட்டில்கள், மது பாட்டில்கள் விற்ற தொகை 1,900 ரூபாயை பறிமுதல் செய்ததோடு துவாக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துவாக்குடி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயா ஹோட்டல் முன்புறம் மூடப்பட்டுள்ள நிலையில் பின்புறத்தில் வைத்து அரசு மதுபான பாட்டில்களை அரசு அனுமதியின்றி கடந்த 5மாதமாக விற்பனை செய்து வந்த தனபால் ப்ரகாஷ் சுகுமாரன் கந்தசாமி ஆகியோருடன் சுமார் 15 அரசு மதுபான பாட்டில்கள் மற்றும் விற்ற பணம் ரூபாய் 1940 ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.அதேபோல் அந்தக் கடையின் அருகே இரண்டு கடை தள்ளி உள்ளே ஒரு சந்து செல்கிறது அதன் உள்ளே சென்று கண்காணிக்க சாமிநாதன் என்பவரின் வீட்டில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அரசு மதுபான பாட்டில்கள் ஏழு கைப்பற்றப்பட்டது மேலும் சாமிநாதனை கைது செய்து மொத்தம் 22 பாட்டில்கள் ஐந்து எதிரிகளுடன் விற்ற பணம் 1940 ரூபாயை துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.