திருவானைக்கோவில் கீழ கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் கழிவுநீர் கிளை வாய்க்கால் தூர்வாரப்படாமல் மக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி திருவானைக்கோவில் பகுதிக்கு உட்பட்ட கீழ கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் சுமார் 100 முதல் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கிளை வாய்க்கால் நீண்ட நாட்களாக முறையாக பராமரிக்கப்படாமலும், தூர்வாரப்படாமலும் உள்ளது. இதனால் வாய்க்காலில் கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் அங்கு வருவதாலும், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுகாதார பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, வாய்க்காலை சுத்தம் செய்து, தூர்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments