சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணி திருச்சியில் தீவிரம்!

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணி திருச்சியில் தீவிரம்!

74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டருடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

சுதந்திரக் காற்றை சுவாசித்த நம் இந்தியா
தனது 74 வது சுதந்திர தின விழாவை நாளை மறுதினம் கொண்டாட உள்ள நிலையில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலும் விழாவை சீர்குலைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.


அந்தவகையில் திருச்சி ஓயாமரி காவிரி ஆற்று பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் குடமுருட்டி பாலங்களில் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையில் மெட்டல் டிடெக்டருடன் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement