Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஹிஜாப் விவகாரம் திருச்சியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஹிஜாப் விவகாரம் திருச்சியில் கர்நாடக பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு முஸ்லீம்கள் மட்டுமன்றி ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கல்லூரி அமைந்துள்ள டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியை மறைமுகமாக தடுக்கும் வகையில் அமைந்துள்ள கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *