Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பா? இரண்டு பேரிடம் திருச்சி மாவட்ட காவல் துறையினர் அதிரடி சோதனை

 தருச்சி இனாம்குளத்தூரில் சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் என்ற இருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் முகநூல் பக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்கள் லைக் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இவர்கள் வீட்டில் சோதனை நடத்தியது. 

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்ததாக கூறப்படும் இனாம்குளத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷர்புதீன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி,

சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த சோதனையில் சோதனையில் இருவரிடமிருந்து ஹார்டுடிஸ்க், 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *