Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்களுக்குள் சண்டை – ஒருவர் கொலை

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (59). இவர் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து சில மாதங்களாக ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் யாசகம் பெற்று வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் இவருக்கு பக்தர்கள் 10 ரூபாயை தானம் செய்தனர். அப்போது மற்றொரு பிச்சைக்காரர் முருகேசனுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முருகேசன் கல்லால் தலையில் அடித்து கந்தசாமியை கொலை செய்துள்ளார்.

இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் ஈரோட்டை சேர்ந்த முருகேசனை கைது செய்துள்ளனர். கோவிட் தொற்றுக்கு பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் அதிகமான பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *