Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரின் முதல் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடக்கம்

திருச்சி நகரம் வழியாக செல்லும கொள்ளிடம் கழிவு நீரால்  மாசுபடுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே நகரின் முதல் பரவலாக்கப்பட்ட  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

77 லட்சத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்டிபி மூன்று மாதங்களில  கட்டி முடிக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஒன்றுமுதல் நான்கு வார்டுகளில்  ஏற்கனவே பாதாள வடிகால் வலைையமைப்பால் மூடப்பட்டிருந்தாலும் ஒரு சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்னும் திறந்தவெளி வடிகால்களில் தண்ணீர் விடப்படுகிறது.

மாநகரம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடத்தில் கலக்கிறது.கொள்ளிடத்தை உள்ள சலவை தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை கொள்ளிடத்தில் சுத்திகரித்து வெளியேற்ற பரவலாக்கப்பட்ட எஸ்டிபியை மாநகராட்சி முன்மொழிந்தது எஸ்டிபி ஆனது சுமார் 3 mld (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) கழிவு நீரை  சுத்தம் செய்ய முடியும். வெளியேற்றப்படும் நீர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தரநிலைகளுக்கு உட்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

எஸ் டி பி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு நிலையானதாக மாற்றக் குடிமை அமைப்பு வளாகத்தில் வணிக வளாகத்தை கட்டத்திட்டமிட்டுள்ளது.

ஆன்சைட் எஸ்டிபி அடுத்த 20 வருடங்களுக்கு கழிவு நீர் உற்பத்தியின் எழுச்சியை நிர்ணயிக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தற்போது யூஜிடி நெட்வொர்க்கை புதுப்பிக்கும் திட்டத்தின் மூலம் திறந்து வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க குறைபாடுகள் சரி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *