Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கூலி தொழிலாளியை தாக்கிய  மூன்று பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேரில் 3 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்

திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் திருவை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் ரமேஷ் (36) கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரமேஷ் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பொழுது அந்த வழியே வந்த அரியமங்கலம் காந்திஜி தெருவை சேர்ந்த சந்தோஷ் (எ)சந்தோஷ் குமார்(20) மற்றும் அவனது கூட்டாளிகளான அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்த செல்வா (எ) செல்வநாதன்( 21 ), காந்திஜி தெருவை சேர்ந்த பாலாஜி (20)மற்றும் ஒருவர் என 4 பேர் வந்துள்ளனர். அப்பொழுது ரமேஷிடம் அவர்கள் தகராறு செய்ததோடு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

பின்னர் ரமேஷை 4 பேரும் சேந்து கையாலும், உருட்டு கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் ரமேஷ் பலத்த காயமடைந்தார்.

ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 இச்சம்பவம் குறித்து ரமேஷ் அரியமங்கலம் போலீசாரிடம் கொடுத்தார் இதனை தொடர்ந்து அங்க பொருத்த பட்டிருந்த சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில்  அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமார், செல்வநாதன், பாலாஜி ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மேலும் அவர்களது கூட்டாளி ஒருவனை தேடி வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *