Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தலை குப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து

நாமக்கல் – திருச்சி மார்கத்தில் ஜெயம் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (27.05.2023) காலை நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு முசிறி வழியாக வந்து கொண்டிருந்தபோது முக்கொம்பை அடுத்த கிளியநல்லூரில் அதிவேகமாக வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றாலும், சின்ன சின்ன காயங்களுடன் சுமார் 15க்கும் அதிகமானோர் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் வாத்தலை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருச்சி – முசிறி நெடுஞ்சாலையை பொருத்தவரை மிகவும் குறுகலான,அதிக இடங்களில் வளைவுகள் நிறைந்த சாலையாக இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நேர்ந்து வருகிறது.

குறிப்பாக இதனை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும், இது போன்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *