Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கைகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் அறநிலையத்தறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.

உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 77 லட்சத்து 38 ஆயிரத்து 183 ரூபாயும், 216.6 கிராம் தங்கம், 1870.900 கிராம் வெள்ளி மற்றும் 261 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பெற்றன என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *