Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரசு பேருந்தை முந்திச் சென்ற போது வாக்குவாதம் – பேருந்து ஓட்டுநர் மண்டை உடைப்பு – திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரை சேர்ந்தவர் உமர் பாரூக். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அவருக்கு முன்னே அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை உமர் பாரூக் முந்தி செல்ல முற்பட்டார். அப்போது பேருந்தின் ஓட்டுனர் சரவணன் அவரை திட்டியுள்ளார். அதனையடுத்து உமர் பாரூக்குக்கும் பேருந்து ஓட்டுனர் சரவணக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. 

உமர் பாரூக் குத்தியதில் அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டை உடைந்தது. மண்டையை உடைத்து விட்டு உமர் பாரூக் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Advertisement

போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *