Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மக்களின் தோழர் எம்.கல்யாண சுந்தரத்தின் 115 வது பிறந்தநாள் விழா

திருச்சியில் பிறந்து, தமிழ்நாடு முழுதும் பரவி இந்தியாவால் கவனிக்கப்பட்ட ஒரு ஆளுமை தோழர் எம்.கல்யாணசுந்தரம். சமூகத்தின் தேவையும் வரலாறும்தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பதன் சரியான எடுத்துக்காட்டு அவரின் வாழ்க்கை. எளிய குடும்பத்தில் பிறந்த எம்.கல்யாணசுந்தரம் “தோழர் எம்.கே” ஆன வாழ்க்கைக் கதை தியாகத்தால் ஆனது, வலிகள் நிறைந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மக்கள் தலைவர் M.கல்யாணசுந்தரம் அவர்களின் 115 வது பிறந்தநாள் இன்று 20.10.2023 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாச்சியார் கோயில் சந்திப்பில் மேற்குப் பகுதி குழு 9 வது வார்டு கிளைச் செயலாளர் தோழர் R. ஆனந்தன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் தோழர் க. சுரேஷ்குமார் , மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S .சிவா ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து , இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மேற்குப் பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க. இப்ராஹிம், 8 வது வார்டு கிளை செயலாளர் R.சரண்சிங் மற்றும் 22 வது வார்டு கிளை செயலாளர் N.நாகராஜ், ராமமூர்த்தி, தோழர் S.சத்தியா, நீதிபதி, வீரமுத்து, ரமேஷ், மாணவர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஜெயலானி , ஜான் பாஷா , நாகராஜன், இளைஞர் பெருமன்றம் ராஜ் உள்பட 25 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *