Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குறை தீர்க்க வந்தவர்களுக்கு குஸ்கா கொடுத்து தீர்த்த ஊராட்சி நிர்வாகம்

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர்

இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குறைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வரின் குறை தீர்க்கும் கூட்டத்தில் மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அப்போது இந்த கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு இரண்டு பெரிய அண்டாவில் குஸ்கா காலை முதலே தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது பொதுமக்களுக்கு குஸ்கா சாப்பாடு கொடுப்பதாக கூறியதால்,

உடனே முந்தி அடித்துக்கொண்டு குஸ்காவை வாங்கிக் கொண்டு மக்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு பின்பு உள்ள பூங்காவில் இனம் சமயபுரம் ஊராட்சி சார்பில் இலவசமாக பொதுமக்கள் குஸ்கா உணவை அருந்தி விட்டு சென்றனர்.

இனாம்சமயபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய அண்டாவில் குஸ்கா செய்து குறை தீர்க்கும் கூட்டத்தில் வந்த பொது மக்களுக்கு வயிற்று குறையை திருத்து அனுப்பிய ஊராட்சி நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *