திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் பாலசுப்ரமணியன் (21). பெல் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வெல்டர் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன் வீட்டில் போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் தனது வீட்டின் அறைக்குச் சென்ற பாலசுப்ரமணியன் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என்றும், பின்னர் அவரது சென்று பார்த்தபோது வீட்டில் பாலசுப்ரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் இறப்பிற்கான காரணம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments