Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலையில் இறந்து கிடந்த ஆண் மயில்

திருச்சி திருவெறும்பூரில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பெல் மேம்பாலத்தில் சுமார் இரண்டு வயது மதிக்க தக்க ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் பெல் செக்யூரிட்டி மற்றும் பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

 அதன் அடிப்படையில் மகேஷ் முதல் நிலை காவலர் பெல் காவல் நிலையத்தில் இருந்து வந்து பெல் செக்யூரிட்டிகள் உதவியுடன் தஞ்சாவூர் சாலையில் கிடந்த ஆண் மயிலை சாக்கு பையில் பத்திரமாக எடுத்து வந்து பெல் செக்யூரிட்டி பாயிண்ட்டில் பத்திரப்படுத்தினர். உடனடியாக வனவிலங்கு அதிகாரி கோபிநாத் மற்றும் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கொடுத்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு குமார் என்பவர் பெல் செக்யூரிட்டி பாயிண்டுக்கு வந்து அந்த ஆண் மயிலை பெற்றுக் கொண்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *