Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோவில் 3 ஊழியர்கள் கைது

இன்று (12.12.2023) காலை 06:45 மணிக்கு ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 1) சென்னாராவ், 2) சந்தாராவ் சந்தா மற்றும் 3) கட்டா ராமு ஆகியோர் சாமி தரிசனம் செய்ய திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மூலஸ்தானம் அருகில் உள்ள காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை வேகமாக தட்டியுள்ளனர். இச்செயலை திருக்கோவில் ஊழியர் விக்னேஷ் என்பவர் உண்டியலை தட்டாதீர்கள் என்று கூறியதால், மேற்படி சென்னாராவ் மற்றும் சிலர் சேர்ந்து விக்னேஷ் தலைமுடியை பிடித்து உண்டியலில் மோதியுள்ளார்.

இதனால் கோவில் ஊழியர் பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து சென்னாராவை தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்த வழித்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் மேற்படி கோவில் ஊழியர்களை தாக்கியதில் கோவில் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் 20 நிமிடம் அமர்ந்து விட்டார்கள். இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோவில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சந்தாராவ் சந்தா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மனு ரசீது எண்.919/23 வழங்கப்பட்டுள்ளது. 

கோவில் தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆந்திரபிரேதசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின்பேரில் புகார் மனு ரசீது எண்.920/23 வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர பக்தர்கள் அளித்த புகாரின்பேரில் வழங்கப்பட்ட மனு (ரசீது எண்.919/23) மீது மேல்விசாரணை மேற்கொண்டு ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்ற எண் : 2992/23 u/s 323, 506(1) IPC-60 (12.12.2023)ந் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *