Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

திருச்சி நகர சரகத்தின் சார்பாக நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றதுஅவ்விழாவிற்கு திருச்சி நகர சரகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா தலைமை வகித்தார்.

தன்னார்வலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கினார். அந்தநல்லூர் ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டா மேரி திருவெறும்பூர் ஒருங்கிணைப்பாளர் சந்தியா மார்கெட் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட் சென்னி சிறப்புரை வழங்கினார். மருங்காபுரி ஒருங்கிணைப்பாளர் காந்தி விழிப்புணர்வு பாடல் பாடினார். சுப்பையா நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநகர தலைவர் இளங்குமரன் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மையங்களின் நிகழ்வுகளை தன்னார்வலர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.திருச்சி நகர பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.  தன்னார்வலர் சகிலா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *