எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா (17.12.2023) அன்று காலை 10:30 மணிக்கு நியூட்டன் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு தலைமை விருந்தினராக நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சி.கே. குமரவேல் கலந்து கொண்டார்.

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எம்.ஹேமலதா, அவர்கள் ஆண்டறிக்கையில், தமது கல்லூரி மாணவர்கள் இந்த வருட அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஆறு இடங்களை பெற்றுள்ளனர் என்பதை பெருமிதத்துடன் கூறினார், NAAC அங்கீகாரம் பெற்றதையும், கல்லூரியின் 100% க்கும் அதிகமான சேர்க்கை விகிதம் மற்றும் 100% வேலை வாய்ப்பு விகிதம், 36 சங்க செயல்பாடுகள், 67 கருத்தரங்குகள், விரிவுரைகள், 15 பயிற்சி பட்டறைகள், 6 தொழில்துறை சுற்றுப்பயணங்கள், 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 21 கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட கல்லூரியின் சாதனைகளை குறிப்பிட்டார்.

தலைமை விருந்தினர் திரு. சி.கே.குமாரவேல் அவர்களின் தன்னுடைய உரையில், இந்த புனிதமான அரங்குக்கு அப்பால் நீங்கள் உலகில் அடியெடுத்து வைக்கும் போது, ஒருபோதும் பணத்திற்காக வேலை செய்யாதீர்கள் என்றும், பதிலாக, உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் ஈடுபடுங்கள் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு சவாலான சூழ்நிலைகளிலும் ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும், உங்களின் மதிப்பு, ஆர்வம் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கட்டும் இரக்கம், பச்சாதாபம் மற்றும் நன்றி உணர்வினை ஒருபோதும் மறக்காதிர் என்றும் உங்களது பயணம் அன்பு, நோக்கம் மற்றும் சிறந்தவையாக இருக்கட்டும் என்று வாழ்த்தி நாம் அனைவரும் இணைந்து அழகிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

இவ்விழாவில், எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியின் (2020-2022) எம்.பி.ஏ மாணவர்கள் 81 பேர் தலைமை விருந்தினரிடமிருந்து பட்டச் சான்றிதழைப் பெற்றனர். தரவரிசை பெற்றவர்களுக்கு தங்க நாணயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக தேசிய கீத பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments