Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மார்கழி மஹோத்சவம் நிகழ்ச்சி

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய மார்கழி மஹோத்சவம் இசை நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர் எம் தீன தயாளு முகர்சிங் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வளவன் வரவேற்புரையாற்றினர். பொதுவாக ‘நடனம் மற்றும் இசையின் மார்கழி திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய நடன வடிவங்களால் நீண்டகாலமாக பொக்கிஷமாக இருந்த உணர்வை நினைவுபடுத்துகிறது.

மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் முதல் ஆண்டு விழாவை மகிழ்விக்கும் வகையில் முதன்முதலில் கொண்டாடப்பட்ட இந்த விழாவின் பிறப்பு 1927 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. மார்கழி மகா உற்சவம் 2022-23 நாம் கொண்டாடும் வேளையில், மார்கழி மாதம் பக்தி மற்றும் இசையின் நேரம் என்பதால் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது கலாச்சார மரபுகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை  நம்புகிறோம்.

மேலும் மார்கழி மகா உற்சவம் நமது கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த  தளமாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *