Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் ஆறரை சவரன் நகையை பறித்து சென்ற திருடர்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் உயர்நிலைப்பள்ளி சாலையில் வசிப்பவர் மகாலட்சுமி. இவருக்கு இரண்டு மகன்கள் திருமணம் ஆன பின்பு, வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவரது கணவர் இறந்த நிலையில் துறையூர் பகுதியில் மகாலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இன்று இவர் அதிகாலையில் 5 மணி அளவில் வீட்டு வாசலுக்கு கோலம் போடுவதற்காக எழுந்து சென்றுள்ளார். அப்பொழுது வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் மகாலட்சுமி சத்தம் போடாத வகையில் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் நகையை பறித்து ஓடிவிட்டனர்.

இப்பகுதியில் மழை பெய்ததாலும், அதிகாலை என்பதாலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் திருடன் கைவரிசையை காட்டியுள்ளனர். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *