கடந்த (29.10.2023)-ந் தேதி அதிகாலை 04:00 மணிக்கு உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணி ரோட்டில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு காரில் வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ராமராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீன்மார்க்கெட் எதிரே உள்ள கண்ணாடி கடை அருகில் மேற்படி ராமராஜ் என்பவரை அரிவாளால் பின் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ரவுடி பாதுஷா (எ) பல்பு பாட்ஷா மற்றும் 6 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி பாதுஷா (எ) பல்பு பாட்ஷா என்பவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் பிரியாணி மாஸ்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 1 வழக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒருவரை கும்பலாக சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக 1 வழக்கும்,

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொழில் போட்டி காரணமாக ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக 1 வழக்கும் என பல வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. எனவே, எதிரி பாதுஷா (எ) பல்பு பாட்ஷாவின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments