Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவல் நிலையத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் மரியடிலோமின்தாஸ் (26). இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரும் சமயபுரம் அருகே மகிழம்பாடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுசீலாமேரி (23) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சிய காதல்ஜோடி சமயபுரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

 இதையடுத்து சமயபுரம் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுசீலாமேரி தனது காதல் கணவனுடன் தான் செல்வேன் என கூறியதைதொடர்ந்து போலீசார் அவரை மரிய டிலோமின்தாசுடன் அனுப்பி வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *