Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவரா நீங்கள்? – புகார் அளிக்கலாம்

பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக வாக்காளர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாள்தோறும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வாக்களிக்க சென்ற வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சிக்கு உள்ளானர். வாக்குச்சாவடி வரை சென்று பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர் வாக்காளர்களுக்கு பட்டியலில் பெயர் இல்லாதது குறித்து அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்று வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவரா நீங்கள்? இந்த இணைப்பின் வழியே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திடவும். https://tinyurl.com/rmvr2024

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *