Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கார் கவிழ்ந்த விபத்தில் அரசு அலுவலக ஊழியர் உட்பட இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் விஸ்தரிப்பு, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (51) மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கோபி (57) இவருடைய உறவினர் கண்ணன் (47) மூவரும் இவர்களுக்கு சொந்தமான காரில் திருச்சியில் இருந்து சிவகாசிக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். காரை விஜயலட்சுமி கணவர் கோபி ஓட்டி சென்றுள்ளார்.

துவரங்குறிச்சிக்கு அருகே தயாகபுரம் கல்லுப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த விஜயலட்சுமி மற்றும் இவரது உறவினர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயம் அடைந்த கோபியை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். 

விபத்து குறித்து தகவல் இருந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *