Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தடுப்பு கட்டை மீது மோட்டார் பைக் மோதி விபத்து – வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் ஊராட்சி கீழக்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் சதீஷ்குமார் (24). இவர் இரவு தனது இருசக்கர வாகனத்தில் திருப்பைஞ்சீயிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோபுரப்பட்டியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாய்க்காலில் தவறி விழுந்த சதீஸ்குமார் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *