Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கள்ளச்சாராய உயிரிழப்பு – AIYF மற்றும் NFIW கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AIYF மற்றும் NFIW ஆகியவற்றின் திருச்சி மாநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன், வழிவிடு முருகன் கோவில் அருகில், AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M.செல்வகுமார் மற்றும் NFIW மாவட்ட தலைவர் S.பார்வதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

AITUC திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் துவக்கவுறையாற்றினார். NFIW மாவட்ட செயலாளர் A. அஞ்சுகம்,AISF மாநில தலைவர் க.இப்ராஹிம் , CPI மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் M. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். நிறைவுரையாக ஜனசக்தி இதழின் ஆசிரியர் T.M.மூர்த்தி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். AIYF மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் த.விஸ்வநாத் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் S. சிவா, மாவட்ட துணை செயலாளர் C. செல்வகுமார், மாவட்ட பொருளாளர் A. சண்முகம், AIYF மாவட்ட தலைவர் R.முருகேசன், CPI மேற்கு பகுதி செயலாளர் R.சுரேஷ் முத்துசாமி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் M.R.முருகன், NFIW மாவட்ட பொருளாளர் M. சுமதி, AIYF மேற்கு பகுதி தலைவர் N.S. பாட்சா, செயலாளர் B.தர்மராஜன்,

NFIW மாவட்ட துணை செயலாளர் முத்துலட்சுமி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் வித்யா, EX.MC புஷ்பம் , AISF மாவட்ட துணை செயலாளர் M.நந்தா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *