திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ரயில்வே பாலத்தின் அருகாமையில் ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கிகிட்ட நிலையில் இருப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், இறந்தவர் ஸ்ரீரங்கம் முறைக்கார தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கலியன் (35) என்பது தெரியவந்தது. இவர் இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார்.

இதையடுத்து அவர் எதற்காக கொள்ளிடம் ரயில்வே பாலத்திற்கு வந்தார்? கொலையா? கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           120
120                           
 
 
 
 
 
 
 
 

 05 July, 2024
 05 July, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments