Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து – 13 பேர் காயம்

பொன்னமராவதியில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து குண்டூர் அருகே வந்து கொண்டிருந்தது. திருச்சி – புதுக்கோட்டை சாலையில் ஓரமாக டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது.

அப்பொழுது குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஒட்டி வந்த புதுக்கோட்டை மருதம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து (60) பேருந்தை ஓரமாக திருப்பிய பொழுது டிப்பர் லாரியில் மோதி சாலை ஓரம் இருந்த முட்புதறில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *