Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீ எனர்ஜி வால்வ்ஸ் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி அருகே உள்ள விராலிமலையில் வடுகப்பட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ எனர்ஜி வால்வ்ஸ் தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் தினத்தைத் தொடர்ந்து சி எஸ் ஆர் செய்முறைகளை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து க.மு.மணி விராலிமலை ஒன்றிய பெருந்தலைவர், மு.பி.மா சத்தியசீலன்

விராலிமலை ஒன்றிய செயலாளர் லட்சுமி காந்த் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி குமார் தலைவர் வடுகப்பட்டி அன்பழகன் உதவி ஆய்வாளர் ஆகியோர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மேலும் தொடர்ந்து இந்த வாரத்தில் வேலூர் சாலை சமத்துவபுரம், வேலூர் அரசு பள்ளி, வடுகப்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஸ்ரீ எனர்ஜி நிறுவனம் மேலாளர்கள் மற்றும் மண்ணும் மரமும் இயக்கம் திருச்சி, தாசில்தார் திரு கருப்பையா தலைமையில் வடுகபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இடங்களிலும் மரம் நடும் விழா நடத்தி மரக்கன்றுகளை நட்டனர். இதில் மாணவர்கள் மாணவிகள் நல்ல உற்சாகத்துடன் தங்கள் பங்களிப்பை கொடுத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *