Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

AlTUC மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் M.C, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, புறநகர் மாவட்ட செயலாளர் செ. ராஜ்குமார்,மேற்குப் பகுதி குழு செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். செல்வகுமார், ஜி.ஆர். தினேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் அ.அஞ்சுகம்,

மாவட்ட பொருளாளர் எம்.சுமதி, மேற்கு பகுதி குழு தலைவர் க.ஆயிஷா, ஜி.ஈஸ்வரி, ராஜேஸ்வரி, சுரேஷ் கண்ணன், அன்பழகன், துரைராஜ், சாதிக், அசோக், வனிதா, தமிழ்செல்வி, சரஸ்வதி, இந்திராணி, அமுல் மேரிஉள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

 

மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *