Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் என்னும் பணி கோவில் கருட மண்டபம் அருகே கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணி முழுவதும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. காணிக்கை என்னும் பணியில் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 68,10,246/-, தங்கம் 118 கிராம், வெள்ளி 410 கிராம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 372 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன என கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *