Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி பாலத்தில் பேருந்து மீது கார் மோதி விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாநகரில் இரண்டு ரயில்வே பாலங்கள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் வருகை தருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி காவேரி பாலத்தில் பேருந்து கார் மோதி விபத்து தற்போது உள்ளானது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் .

இந்த விபத்து காரணமாக திருச்சி காவேரி பாலம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *