Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் அரசு அலுவலகங்களில் முகவுரை உறுதிமொழி ஏற்பு

75 ஆவது இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (26.11.2024) அனுசரிக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையினை துணை மேலாளர் (மத்திய வழிவசூல்தாள் ) ஜூலியஸ் அற்புத ராயன் முன்னிலையில்,

அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் இந்திய அரசமைப்பு முகவுரை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சுவாமிநாதன் (தொழில்நுட்பம்) சுரேஷ் குமார் (வணிகம்) ரவி (பணியாளர் மற்றும் சட்டம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா, வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் துணை ஆணையர் கே.பாலு, மாநகர் நல அலுவலர் மா. விஜய் சந்திரன், உதவி ஆணையர் த.சசிகலா மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க அதனைத் தொடர்ந்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பின்வருமாறு வாசித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *