இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற 141 இடைத்தேர்தலின் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) முதல்நிலை சரிபார்க்கும் பணியானது எதிர் வரும் 03.06.2026 அன்று முதல் தொடங்கி நடைபெற
உள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில்
முதல்நிலை சரிபார்ப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு, நேற்று (02.06.2026)
திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்
தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மின்னணு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையானது திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளபடி,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) முதல்நிலை சரிபார்க்கும் பணியானது நடைபெற உள்ள,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்சாரம், இணையதள வசதி,கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), காணொளிப்பதிவு ஏற்பாடுகள், தீயணைப்பு பாதுகாப்பு
உபகரணங்கள், தடுப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் இயந்திரங்களை பரிசோதனை செய்ய தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளும் பணியானது தொடங்கி
நடைபெற்று வருகிறது. மேற்கண்டுள்ள பணியினை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்,இ.ஆ.ப., ஆய்வு

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments