Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபம் திருச்சி தேசிய கல்லூரி வந்தடைந்தது

1971ம் ஆண்டு நடைபெற்ற பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இந்நிலையில் இதன் 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலை நகர் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் வெற்றி தீ பந்தத்தை ( “ஸ்வர்னீம் விஜய் மஷால்” ) ஏற்றி வைத்தார்.

இந்த வெற்றி தீபம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. கல்லூரியில் வைக்கப்பட்ட வெற்றி தீபச்சுடரை என்.சி.சி மற்றும் தேசிய மாணவர் படையினர் மரியாதை செலுத்தினர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாணவர்கள் மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சி ஊட்டும் விதமாக இருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *