Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று 13.10.21 ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைப் பெற்றது. இங்கு ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் வெளிநாடு, இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்படுகிறது.
இங்கு சுமார் 3800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றன. 

இதில் பல்வேறு ஷாப்புகள் உள்ள பணிமனை உள்ளது. இன்று அந்தந்த ஷாப்களில் சேர்ந்த தொழிலாளர்கள் பூஜை நடத்தினர். பணிமனை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்தனர். 

மேலும் இந்த ரயில் எஞ்சின்கள், பொருள்களின் முன்பாக இருந்து ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். வட மாநிலத்தவர்கள் 1200 மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருவதால் அதிகளவு வட மாநிலத்து குடும்பங்களை காண முடிந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *