போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு துவாக்குடி காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அக்பர் சாலை புத்தர் தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு துவாக்குடி சட்டமன்ற நாகராஜ் தலைமையிலான போலீசார் பொதுவெளியில் மது அருந்துவது அருந்திவிட்டு சாலைகளில் அருவாள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தகராறு
செய்பவர்கள் கஞ்சா குடிப்பவர்கள் விற்பவர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நாகராஜ் தனது செல்போன் எண் 9894670764 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அரை எண் மற்றும் 1933 என்ற எண் மற்றும் 100 மற்றும் 108 ஆகிய இலவச
அழைப்புகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கும் வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
What's Your Reaction?






