108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் வழங்கும் வைபவம் இன்று மாலை அம்மாமண்டபம் படித்துறையில் நடைபெற்றது.

ரிஷி ஒருவரின் சாபத்தினால் குளத்தில் சாப விமோஷனத்திற்காக காத்திருந்த காந்தர்வ மன்னர், அக்குளத்தில் சாபத்திற்குள்ளான மன்னன் ஒருவன் யானையாக கஜேந்திரன் என்ற பெயரில் குளத்தில் உள்ள தாமரை மலர்களை பறித்து பெருமாளை வழிபட்டு வந்தான்.
இந்நிலையில் முதலையாய் வாழ்ந்துவந்த காந்தர்வன், குளத்தில் நீராட வந்த யானை கஜேந்திரன் காலை பிடித்தது, உயிரைக்காப்பாற்ற போராடிய கஜேந்திர யானை ரங்கா, ரங்கா என மரண ஓலமிட்டது. தனது பக்தனை காப்பாற்ற தனது சக்கரத்தை முதலைமீது விட்டார், இதனால் காந்தர்வன் சாபவிமோசனம் அடைந்தான், மேலும் யானையான கஜேந்திரனுக்கும் சாபவிமோஷனம் அளித்தார். சாபவிமோஷனம் பெற்ற யானை கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்ததை தான் கஜேந்திர மோட்சம் என்றழைக்கப்படுகிறது.

இந்த வைபவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமியன்று கஜேந்திரமோட்சம் நிகழ்ச்சி அம்மாமண்டபம் படித்துறையில் நடத்தப்படுகிறது.
அதன்படி நம்பெருமாள் பச்சை பட்டுடுத்தி, முத்துக்கொண்டை, நீலப்பதக்கம், வைர அபயஹஸ்தம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்தபடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து, அங்கு திருமஞ்சனம் கண்டருளினார்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் கோவில் யானை ஆண்டாள் காலை முதலை இழுப்பது போன்றும், யானையை நம்பெருமாள் காப்பாற்றி மோட்சம் அளிப்பதுபோன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்று தமக்கு மோட்சம் கிடைத்ததைப் போன்று எண்ணினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments