Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வெளியிட்டு, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை இன்று (24.3.2022) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், உதவி ஆணையர் (கலால்) ஆர் ரெங்கசாமி, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சி.முத்தரசு, காவல் ஆய்வாளர்கள் மீராபாய், சுமதி, அலுவலக மேலாளர் பி.சித்ரா, கோட்ட கலால் அலுவலர்கள் பிரகாஷ், சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியானது பல்வேறு பகுதிகளின் வழியாகச் சென்று இறுதியில் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் முடிவுற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *