Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறை அருகே எல்லையம்மன் கோவில் ஐம்பொன் கலசங்கள் திருட்டு -போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சித்தா நத்தம் ஊராட்சியில் அமைந்திருக்கும் அருள்மிகு எல்லை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று  இரவு மர்ம நபர்கள் கோவில் மேல் உள்ள கோபுரத்தில் நான்கு கலசத்தில் மூன்று  ஜம்பொன்னால் ஆன கலசங்களை திருடி சென்றனர். திருட்டு குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபுர கலசத்தை திருடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் கோபுர கலசம் திருடு போனதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *