Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மத்திய சிறை கைதி தப்பியோட்டம் – 3 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தீபன்ராஜ், வலிப்பு நோய் காரணமாக கடந்த 9ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று அதிகாலை சிறைக் கைதி தீபன்ராஜ் தப்பி ஓடிய நிலையில், சிறை துறை காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து தப்பியோடிய கைதி தீபன்ராஜ் திருப்பூரில் சிறை காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பணியில் அஜாக்கிரதையாக இருந்த சிறைத்துறை காவலர்கள் பிரகாஷ், கோவிந்தராஜன், வினோத்குமார் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *