Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டிவந்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் 6 பேர் காயம்

திருச்சி கே.கே.நகர் மெயின் ரோடு மங்கம்மாள் சாலை பகுதியில் நேற்று இரவு ஒரு கார் தாறுமாறாக வந்தது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது இடித்ததில் கீழே விழுந்து காயமடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்து உடனே அந்த காரை விரட்டி சென்றனர்.

ஆனாலும் அந்த கார் நிற்காமல் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் சுந்தர் நகர் என வழிநெடுக 4 வாகனங்களில் மோதிக் கொண்டே சென்றது.பின்னர் கிருஷ்ணமூர்த்தி நகர் அருகே பொதுமக்கள் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அனைவரும் சேர்ந்து காரை தூக்கி பள்ளத்தில் தள்ளி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

விசாரணையில் அவர் நவல்பட்டு நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் உச்சிக் கருப்பு (44) என்பது தெரியவந்தது இந்த விபத்தில் திருவெறும்பூரைச் சேர்ந்த ராமு எல்ஐசி காலனியை சேர்ந்த நேரு மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தெற்கு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *